இன்றைய இராகம் பெஹாக்
என அழைக்கப்
படும் பிஹாக்
இராகம். ஆரோகணத்தில்
இதன் ஸ்வரங்கள்
ரிஷபமும், தைவதமும்
மத்திமத்தில். மற்ற அனைத்தும் சுத்த ஸ்வரங்கள்.
இந்த இனிமையான இராகம்,
கற்றுக் கொள்பவர்கள்,
மற்றும் இசை
வல்லுனர்கள் இருவர் மத்தியிலும் மிகப் பிரபலமானது.
ஆரோகணத்தில் ஆலாபனை சுத்த
மத்திமத்திற்க்கு பதில் தீவிர மத்திமத்தில் ஆரம்பிக்கும்.
அவரோகணத்தில் தீவிர மத்திமம், சுத்த மத்திமத்துடன் துவங்கும்.
பாடுவதற்கேற்ற நேரம்: இரவின்
இரண்டாவது ஜாமம்
(9 - 12), மழைக் காலங்கள்.
பாடுவதற்கேற்ற மனநிலை: சாந்தம்
(இந்த இராகம்
மன அழுத்தத்தைக்
குறைத்து, அமைதியயான
தூக்கத்தைத தர வல்லது). எதிர்பார்ப்பு, பிரிவிற்க்குப்
பின் இணையத்
துடிக்கும் ஏக்கம், இதயத்தின் தவிப்பு போன்றவை.
இன்று நாம் மெல்லிசை
மன்னர்கள் இசையில்
உருவான, படித்தால்
மட்டும் போதுமா
என்ற படத்தில்
வரும், "தண்ணிலவு தேனிறைக்க, தாழை மடல்
நீர்தெளிக்க" என்ற பாடலை
பார்ப்போம். இது ஒரு அமைதியான (சாந்தம்)
பாடல்.
மனதை வருடும் புல்லாங்குழலின்
முன்னிசையுடன் துவங்கும் பாடல், முதல் இரண்டு
வரிகள் பெண்மையைப்
பற்றியும், அடுத்த இரண்டு வரிகள் காதலை
உணர்த்துவதாகவும் அமைந்திருக்கும். அதற்கேற்ப
மிருதுவான இசை.
"வஞ்சி மகள் நடை பயின்று
சென்றாள்" என்னுமிடத்தில் சென்..றாள் சற்று
சுசீலா இழுத்துப்
பாடும் அழகு,
"இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்"
என்று பாடி
விட்டு, சிறிது
நாணத்தை வெளிப்படுத்தும்
விதமாக " நாணி நின்றாள்" என்று இன்னும் மென்மையாக
முடிக்கும் இடம், மன்னர்களின் தனிப் பாணி.
சரணங்களுக்கு இடையே வரும் குழல், சைலஃபோன
கலந்த இடைய்சை,
பாடல் முழுதும்
ஒலிக்கும் மிருதுவான
தப்லாவின் ஒலி,
அனைத்துமே பாடலுக்கு
மேலும் இனிமை
சேர்க்கின்றன. கவிஞரின்
வரிகள் தேனினும்
இனிமை. அவ்வாறே
சுசீலா அவர்களின்
குரலும். ஒரு
இனிமையான சூழ்நிலையில்
அமைந்த உள்ளததை
மயிலிறகால் வருடும் பாடல் இது.
மேலும் சில பாடல்கள்
இந்த இராகத்தில்
(எனக்கு தெரிந்த
சில பாடல்களை
மட்டுமே குறிப்பிடுகிறேன்):
ஒரு பெண்ணைப் பார்த்து
- தெய்வத்தாய் - எம் எஸ் வி - டீ
கே ஆர்
ஹேய், ஓராயிரம் - மீண்டும்
கோகிலா - இளையராஜா
உன் பார்வையில் ஓராயிரம்
- அம்மன் கோயில்
கிழக்காலே - இளையராஜா
சுட்டும் விழிச்சுடர் - கண்டு
கொண்டேன்
கண்டு கொண்டேன் -
ஏ ஆர் ரஹ்மான்
பிஹாக் இராகத்தில் அமைந்த
இரண்டு ஹிந்திப்
பாடல்கள்:
தேரே சூர் அவுர்
மேரே கீத்
- கூன்ஜ் ஊத்தி
ஷெனாய்
- லதா
மங்கேஷ்கர் - இசை, வசந்த்
தேசாய் (ஷெனாய்
- உஸ்தாத் பிஸ்மில்லா
கான்)
நன்றி! இன்னொருநாள் வேறொரு
இராகத்துடன் சந்திப்போம். வணக்கம்.
ஜெய்ஹிந்த்!

No comments:
Post a Comment