Tuesday, 20 January 2015

தமிழ்த் திரையுலகின் சிற்பிகள்: 5

கோபி சாந்தா என்கிற மனோரமா. மன்னார்குடியில் பிறந்தவர். முதன் முதலில் கவிஞரால் மாலையிட்ட மங்கை என்ற படத்தில் அறிமுகம் ஆனவர். அந்தப் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தாவ். பின்னர் தனது கவனத்தை காமெடியின் பக்கம் செலுத்தி அதில் 40 ஆண்டுகளும்மும் மேல் தன்னிகரற்ற நடிகையாக விளங்கினார். 60களில் திரு நாகேஷுடனும், 70 வரை திரு சோவுடனும் 80லிருந்து  திரு தேங்காய் ஸ்ரீனிவாசனுடனும் இணைந்து நடித்தவர். இவரது நடிப்பு தனித்தன்மையுடன் காணப்படும். இவர் தனது சொந்தக் குரலில் 300க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். இவரது முதல் பாடல், L R ஈஸ்வரியுடன் பாடிய, மகளே உன் சமத்து என்ற பாடத்தில் இடம்பெற்ற "தாத்தா தாத்தா பிடி குடு, இந்த வயதிலே சடுகுடு என்ற பாடலாகும். ஆனால்  இவருக்கு புகழ் தேடித்த் தந்த பாடல், பொம்மலாட்டம் படத்தில் வரும் "வா வாத்தியாரே வூட்டாண்டே" என்ற பாடல். இவர் நடித்த கதாபாத்திரங்கள் இன்றும் பலாராலும் பேசப் படுபவை. உதராணத்திற்கு, தில்லான மோகனாம்பாள் "ஜில் ஜில் ரமாமணி" அதில் பாண்டியன் நானிருக்க என்ற ஒரு பாடலுக்கு இவரது நடனமும் நடிப்பும் வெகுவாக பாராட்டப் பட்டது. இயக்குனர், ஸ்ரீதர், கே பாலச்சந்தர் போன்ற அனைத்து இயக்குனர்களும் தனது படத்தில் இவரை நன்கு பயன்படுத்தியுள்ளனார். அதுவே இவரது நடிப்புக்கு ஒரு சான்று. இவரது வசன உச்சரிப்ப்பும் வித்தியாசமாக இருக்கும். "ஓயு பெய்ய மை, அதுய ஓயு சின்ன குயி" என்ற வசனம் படு பிரசித்தம். 2002ஆம் வருடம் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. எந்தவித பாத்திரமானாலும் அனாயசமாக நடிக்கக் கூடிய ஒரு நடிகை. 1000 படங்களும், இணையாக 1000 மேடை நாடகங்களிலும் நடித்த நடிகை. இவர் நலமுடன் வாழ நமது பிரார்த்தனைகள்.

No comments:

Post a Comment