கௌரிமனோகரி கர் நாடக
இசையின் 23வது
மேளகர்த்தா இராகமாகும். அசம்பூரண மேள பத்ததியில்
இந்த இராகத்திற்கு
கௌரீ வேளாவளி
என்ற பெயர்
கொடுக்கப்பட்டுள்ளது.
வேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 5வது மேளம்.
கருணைச்சுவை நிரம்பியது. எப்பொழுதும்
பாடலாம்.
இதன் மத்திமத்தை பிரதி
மத்திமாக மாற்றினால்
இராகம் தர்மவதி
(59வது மேளகர்த்தா)
ஆகும்.
ஐரோப்பிய இசையில் உள்ள
Melodic Minor Scale என்ற சுரக்கோர்வையின் ஆரோகணம்
கௌரிமனோகரி மேளத்தை ஒத்துள்ளது. (அதன் அவரோகணம்
20 வது மேளமான
நடபைரவியை ஒத்துள்ளது.)
கௌரிமனோகரியின் ஜன்ய இராகங்கள்:
பாதுதீபகம், வேளாவளி, கோகிலதீபம்,
ஹம்ஸபூஷணி, ஹம்சதீபகம், சாமசாளவி, சாளவிபங்காள, சிங்களபைரவி,
கமலா ஆகிய இராகங்கள்.
இன்று இந்த இராகத்தில்
அமைந்த மெல்லிசை
மன்னரின் பாடல்
பற்றிப் பார்போம். "மலரே,
குறிஞ்சி மலரே"
என்ற பாடல்,
Dr.சிவா என்ற
படத்தில் இடம்
பெற்றது.
"மலரே குறிஞ்சி மலரே"
என்று பாடலின்
துவக்கத்தில் ஜேசுதாசும், ஜானகியும் பாடும்போது ஒரு
சிறு எதிரொலியை
அமைத்துள்ளனர். பாடல் காட்சி தலைக் காவிரியில்
ஆரம்பிப்பாதாக காண்பிக்கப் படுகிறது. பின் முழுவதும்
மழைப் பிரதேசங்களிலும்
பூன்தொட்டங்களிலும் வருவதால், இந்த
எதிரொலி பாடலுக்கு
மிகவும் ஏற்புடையதாக
உள்ளது. "தலைவன் சூட நீ மலர்ந்தாய்,
பிறந்த பயனை
நீ அடைந்தாய்"
என்ற வரிகளில்
நீ என்று
இழுக்கும்போது கூட ஒலிக்கும் புல்லாங்குழல் இசை
மிகவும் இனிமை.
சரணங்களுக்கு இடையே புல்லாங்குழலும் சிதாரும் இணைந்து
ஒலிப்பது பாடலின்
இனிமைக்கு மேலும்
அழகு சேர்க்கிறது.
சரணங்களில் உடன் வரும் தபலா
நடை, மறுபடியும்
பல்லவியில் தலைவன்
சூட நீ
மலர்ந்தாய் என்ற வரிகளுக்கு மாற்றி ஒலிக்க
செய்வது பாடலுக்கு
ஒரு பல்சுவை
அளிக்கிறது. ஒரு நல்ல குடும்ப சூழ்நிலையைப்
பிரதிபலிப்பதாக பாடலின் இசை மிகவும் கண்ணியமாகவும்
தரமாகவும் அமைந்துள்ளது.
இந்த இராகத்தில் அமைந்த
இன்னும் சில
பாடல்கள்:
பாட்டும் நானே பாவமும்
நானே - திருவிளையாடல்
-
கே வி மகாதேவன்
கௌரி மனோகரியை கண்டேன்
- மழலைப்
பட்டாளம் -
எம் எஸ் விஸ்வநாதன்
கவிதை அரங்கேறும் நேரம்
- அந்த 7 நாட்கள்
- எம் எஸ்
வி
பொன்வானம் பன்னீர் தூவுது
- இன்று நீ
நாளை நான்
- இளையராஜா
சோலை பூவில் மாலை
தென்றல் - வெள்ளை
ரோஜா - இளையராஜா
தேன் பூவே பூவே
வா - அன்புள்ள
ரஜினிகாந்த் - இளையராஜா
தாழம்பூவே வாசம் வீசு
- கை கொடுக்கும்
கை -
இளையராஜா பூங்காற்றிலே உன் சுவாசத்தை - உயிரே
- ஏ ஆர்
ரஹ்மான்

No comments:
Post a Comment