Tuesday, 20 January 2015

தமிழ் திரையுலகின் சிற்பிகள்: 2

வி சி கணேசன் என்று அழைக்கப்ப் படும் சிவாஜி கணேசன். தந்தை பெரியாரால் சிவாஜி என்று பெயர் சூட்டப் பட்ட நடிகர் திலகம். முதல் படத்திலேயே தனது வித்தியாசமான நடிப்பினால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தவர். படத்திற்கு படம் இவரது நடிப்பில் வித்தியாசம் இருக்கும், மிகவும் சாதாரண கதையம்சம் கொண்ட படமாயினும் ஏனோ தானோ என்று நடிக்காமல் முழு ஈடுபாட்டுடன் நடித்த நடிகர். நடிப்பு ஒன்றே தனது மூச்சாக வாழ்ந்தவர். கலைத்தாயின் தவப் புதல்வன். பல ஆங்கில நடிகர்களாலும்  பாராட்டப் பட்ட ஒரே இந்திய நடிகர். தான் ஏற்ற பாத்திரமாகவே மாறிவிடும் இயல்பு கொண்டவர். நேரம் தவறாமை இவரது முக்கிய ஒழுக்கங்களில் ஒன்று. இயக்குனர்களை ஆட்டுவிக்காமல் இயக்குனர்களின் நடிகராக இருந்தவர். இன்றைய நடிகர்களில் இவரின் பாதிப்பு இல்லாத நடிகர்கள் எவருமே இல்லை எனலாம்தன்னுடைய பல படங்களின் மூலம் நாட்டுப் பற்றை வலியுறுத்திய ஒரே நடிகர். ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவரது மகனுக்கு கூறிய அறிவுரை: நீ நடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் சிவாஜியின் படங்களைப் பார்!, இதை விட என்ன விருது வேண்டும் இவருக்கு! இவரது புகழுக்கு, இவர் பதவியில் ஏதும் இல்லாதிருந்தும், படங்களில் நடிக்காதிருந்தும், இவர் மரணமடைந்தபோது அலைகடலென திரண்ட ரசிகர் கூட்டமே ஒரு சான்று. தமிழ் திரையுலகம், ஏன் இந்தியத் திரையுலகம் இருக்கும் வரை இவரது புகழ் மறையாது. வாழ்க நடிகர் திலகத்தின் புகழ். ஜெய்ஹிந்த்!

No comments:

Post a Comment