Saturday, 20 December 2014

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் – 5 சி.ஆர். சுப்பராமன்.


1940களில் தமிழ் திரையிசையில் மேற்கத்திய இசையின் தாக்கத்திற்கு பதியம் போட்டவர் சி.ஆர். சுப்பராமன்.
எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்ததி, டி.ஜி.லிங்கப்பா, கண்டசாலா, கோவர்த்தனம் போன்றவர்களின் குரு இவர்.
கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேலை நாட்டிசை, நாட்டுப்புற இசை என்று அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருந்த இவர், அந்தக் காலத்தில் ஆரம்பித்து வைத்த போக்குதான் இந்தக் காலத்திலும் தொடர்கிறது..அந்தக் காலத்திலேயே இவர் துணிந்து லத்தீன் அமெரிக்க இசையை புகுத்தி இசையமைப்பில் சில மாறுதல்களை கொண்டு வந்தார்.

தனது 16ஆம் வயதில் ஜி ராமனாதனின் சகோதரர். சுப்பைய்யா  பாகவதரின் சிபாரிசில் சுப்பராமன் HMV நிறுவனத்தில் ஹார்மோனியம் வாசிப்பவராக வேலையிலமர்ந்தார்.  இசையின் மீது இவருக்கிருந்த ஈடுபாடும், பக்தியும் விரைவிலேயே இவரை HMVயில்  துணை இசை அமைப்பாளராக உயர்த்தின

இரவுகளில் சுப்பராமன், பணி  முடிந்ததும், ஒரு இளைஞரை வயலின்  வாசிக்க சொல்லிவிட்டு கீர்த்தனைகளை பாடுவார். அந்த இளைஞர் வேறு யாருமல்ல. T K ராமமுர்த்தி அவர்கள்தான். அவரை HMV யில் நிரந்த வேலைக்கு  அமர்த்திவிட்டு தனது உதவியாளராகவும் நியமித்தார்..
.
தனது 10 ஆண்டு திரை வாழ்க்கையில் இவர் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் சாகா வரம் பெற்றவையாக அமைந்தன. தேவதாஸ், லைலா மஜ்னு போன்ற புகழ் பெற்ற படங்கள் இவர் இசையமைப்பில் வெளியாயின.

இவர் இசையமைப்பில் பாடிய படக நடிகர்கள்:
M K தியாகராஜ பாகவதர், P U  சின்னப்பா, C S R ஆஞ்சநேயலு, U R ஜீவரத்தினம், T R ராஜகுமாரி, K. R. ராமசாமி, V. நாகையா, P பானுமதி, N S கிருஷ்ணன், T A மதுரம், S வரலக்ஷ்மி போன்றோர்.

இவர் இசையமைப்பில் பாடிய பின்னணி பாடகர்கள்:
கண்டசாலா, A M ராஜா, திருச்சி லோகநாதன், V N சுந்தரம், T. A மோதி, M L வசந்தகுமாரி P A பெரியநாயகி, P லீலா, T V ரத்தினம், R பாலசரஸ்வதி தேவி, A P கோமளா, K ஜமுனா ராணி, K V ராணி ஆகியோர்

இவர் இசையமைப்பில் வெளிவந்த சில பாடங்கள்:
அபிமன்யு, ராஜ முக்தி, ரத்ன குமார், லைலா மஜ்னு, வேலைக்காரி, நல்ல தம்பி, கன்னியின் காதலி, ஸ்வப்ன சுந்தரி, மர்மயோகி, மணமகள், மருமகள், சண்டிராணி, தேவதாஸ் போன்றவை ..

உலகே மாயம், சின்னஞ்சிறு கிளியே, துன்பம் நேர்கையில்  போன்ற அழியாப் பாடல்களைத் தந்த சி.ஆர். சுப்பராமன் 32 வயதிலே இவ்வுலகை விட்டு நீங்கினார். இவரது மறைவு தமிழ் திரையுலகுக்கு ஒரு பேரிழப்பாகும்.



No comments:

Post a Comment